For Daily Alerts
Just In
கோவையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் இன்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டனர். அவர்கள்வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோயம்புத்தூரில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.
உடனே போலீசார் அவர்களை வளைத்துப் பிடித்துச் சோதனையிட்டபோது, அவர்களிடம் 2 கிலோ கஞ்சாஇருப்பது தெரிய வந்தது. மார்க்கெட்டில் இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.
கஞ்சாவைக் கைப்பற்றி போலீசார் அந்த இருவரையும் கைது செய்து காவலில் வைத்தனர்.
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]