ஆண்டிப்பட்டியில் போட்டியிடுகிறது மதிமுக
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டால் மதிமுக அவரை எதிர்த்து தனி வேட்பாளரைநிறுத்தும் என்று மதிமுக பொருளாளரும், மத்திய அமைச்சருமான கண்ணப்பன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
நாங்கள் ஜெயலலிதாவை எதிர்த்து தனித்துப் போட்டியிடுவோம். பொது வேட்பாளர் யாரும் நிறுத்தப்படுவாராஎன்பது குறித்து எங்களுக்குத் தெயாது.
பொடோ சட்டத்தில் மதிமுக சார்பில் சொல்லப்பட்ட திருத்தங்கள் பசீலிக்கப்பட்டு சில திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதுபோலவே பிற கட்சிகள் சொல்லும் திருத்தங்களும் பசீலிக்கப்படும்.
விசாரணையின்றி 6 மாதம் வரை சிறையில் வைக்கலாம் என்ற அம்சத்தை எங்களது யோசனையின் பேரில் 3மாதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.
பொடோ சட்டத்தை தங்களது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது காங்கிரஸ் மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள். அது கண்டிக்கத்தக்கது.
பொடோ சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதன் மூலம் அது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருமா என்பதுகுறித்து யூகமாக பதிலளிக்க முடியாது என்று கண்ணப்பன் கூறினார்.