பாகிஸ்தானைத் தாக்க இந்தியா முடிவு?
டெல்லி:
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தானியப் படைகள் நடமாட்டம் அதிகாக இருப்பது குறித்துகவலை தெரிவித்த அமைச்சரவைப் பாதுகாப்புக் குழு, வெகு விரைவில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்ததிட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இக்கூட்டத்தின்போது, நாடாளுமன்றத் தாக்குதல் குறித்து நடந்து வரும் விசாரணை குறித்து வாஜ்பாயிடம்தெரிவிக்கப்பட்டது.
தீவிரவாதிகளின் இத்தாக்குதல் குறித்து நாளை கூடவுள்ள நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அத்வானிவிளக்கமளிப்பார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம்தெரிவித்தார்.
ஆனால், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு ஜஸ்வந்த் சிங் நேரடியாகப் பதிலளிக்காமல்,எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று மட்டும் கூறினார்.
மேலும், இதுகுறித்து நாளை அத்வானி நாடாளுமன்றத்தில் விளக்கமாகக் கூறுவார் என்றும் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
இந்தத் திடீர்க் கூட்டத்தில் அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாதுகாப்பு ஆலோசகர்பிரஜேஷ் மிஷ்ரா உள்பட பல ராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.