60 அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சி: ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை:
தமிழக அரசு 60 அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கப்போகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் இன்று (திங்கட்கிழமை) குற்றம் சாட்டினார்.
இன்று நிருபர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேட்டியளிக்கையில் கூறியதாவது:
தமிழக அரசு ஏற்கெனவே 30 சதவீதம் வரை அரசு ஊழியர்களை அடுத்த 5 ஆண்டுகளில் குறைப்பதாககூறியுள்ளது. இதையடுத்து 60 அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியிலும் அரசு இறங்கியுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைவர்களால். அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்கள் மிகவும்பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தஒதுக்கீட்டினால் 88 சதவிகித மக்கள் பலனடைவார்கள என்று அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அரசின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையினால் இந்த 88 சதவிகித மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதை மனதில்கொண்டு தமிழக அரசு ஆட்குறைப்பில் ஈடுபடாமல், வேறு ஏதாவது திட்டத்தை கொண்டு வரலாம் என்று ராமதாஸ்கூறினார்.












Click it and Unblock the Notifications