திமுகவை தெருவில் நிறுத்த ஜெயலலிதா முயற்சி: வாழப்பாடி
திருச்சி:
மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவை வெளியேற்றி தெருவில் நிறுத்தவே பாஜகவுடன் கூட்டணிஏற்ப்படுத்த அதிமுக முயற்சி செய்து வருவதாக ராஜீவ்காந்தி காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி கூறியுள்ளார்.
திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
காங்கிரஸ் கட்சியுடன் தமிழக ராஜீவ் காங்கிரசை இணைப்பது குறித்து தேதி மற்றும் இடம் இன்னும்முடிவாகவில்லை.
இடைத்தேர்தல் மூலம் பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்த ஜெயலலிதா துடிக்கிறார். இடைத்தேர்தலில் பாஜகவேட்பாளரை நிறுத்தினால் அதிமுக ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மத்திய அமைச்சரவையிலிருந்து திமுகவை வெளியேற்றி தெருவில் நிறுத்த வேண்டும் என்பதே அதிமுகவின்திட்டம். அதற்காக தான் ஜெயலலிதா கூட்டணி ஏற்படுத்த முயல்கிறார்.
அரசியல் பழி தீர்ப்பதை துவக்கி வைத்தவர் கருணாநிதி தான். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதும் அதனைமறுப்பதும் திமுகவுக்கு கை வந்த கலை. திமுகவும், கருணாநிதியும் ஊழலுக்கு அப்பற்பட்டவர்கள் என்று கூறமுடியாது.
பொடோ சட்டம் தேவையற்றது. அதை கிடப்பில் போட்டு விட்டு எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசித்து வேறுசட்டம் கொண்டு வரவேண்டும் என்று வாழப்பாடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.