அரசியல் தலைவர்களை கூண்டோடு ஒழிக்க பாக். திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் யோசனைப்படிதான் இந்திய நாடாளுமன்றத்தின் மீதுஜெய்ஷ்-ஏ-முகம்மத், லக்ஷர்-ஏ-தொய்பா ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளும் இணைந்து தாக்குதல் நடத்தினஎன உள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.

தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்தது. உள்துறை அமைச்சர்அத்வானி தாக்கல் செய்த அந்த அறிக்கையின் விவரம்:

பல மதத்தினர் வாழ்ந்தாலும் கூட இந்தியா ஒற்றுமையோடு வாழ்ந்து கொண்டிருப்பதை பாகிஸ்தானால் பொறுக்கமுடியவில்லை. இந்தியாவை துண்டுபோட வேண்டும் என்ற திட்டத்துடன் தான் காஷ்மீரில் தீவிரவாதத்தைபாகிஸ்தான் வளர்க்க ஆரம்பித்தது.

இதன் இன்னொரு கட்டமாகத் தான் நாடாளுமன்றத்தைத் தாக்கி அரசியல் தலைவர்களை கூண்டோடு கொல்லத்திட்டமிட்டது பாகிஸ்தான். இதன் மூலம் முக்கிய தலைவர்களை இழந்து நாடு சீர்குலையும், இதைத் தொடர்ந்து மதமோதல்கள் வரும் என பாகிஸ்தான் எதிர்பார்த்தது. இதன் மூலம் நாட்டையே துண்டாட முயன்றது.

பாகிஸ்தானில் உள்ள லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளும் சேர்ந்துதான் இத் தாக்குதலை நடத்தியது நமது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐ.எஸ்.ஐ. தான் இதற்கான திட்டத்தைப்போட்டுக் கொடுத்துள்ளதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது என அத்வானி தனது விளக்க அறிக்கையில்கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+