ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் முறியடிப்பு

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ:

காஷ்மீரில் ராணுவ முகாம்களின் மீது தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.

ரம்ஜான் மாதத்தையொட்டி கடந்த 4 வாரமாக பல்வேறு தாக்குதல்களுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.ஆனால், அவர்களின் வயர்லெஸ் செய்திப் பறிமாற்றத்தை ராணுவம் இடைமறித்துக் கேட்டதால் அனைத்துத்தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன என உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மூ நகரில் ராணுவ முகாம்களை தற்கொலைப் படைகளைக் கொண்டு தாக்க திட்டமிட்டிருந்தனர். இதைத்தெரிந்து கொண்டதால் உரிய நடவடிக்கைகள் எடுத்து தாக்குதலைகளைத் தடுத்துவிட்டோம் என இன்டலிஜென்ஸ்பீரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் ராணுவ, போலீஸ் உடைகளில் வருவதால் இந்த உடைகளை கடைகளில் விற்கதேசிய அளவில் தடை விதிக்கவும் அரசுக்கு உளவுப் பிரிவுகள் யோசனை கூறியுள்ளன.

ஹூரியத் கட்சி அலுவலகத்தில் ராணுவம் சோதனை:

காஷ்மீரில் உள்ள ஹூரியத் மாநாடு கட்சி அலுவகத்தில் ராணுவத்தின் அதிரடிப் படை நேற்றிரவு சோதனைநடத்தியது.

ஆனால், அலுவலகத்தை ராணுவம் சூறையாடியதாகவும் காவலாளியை அடித்து விரட்டியதாகவும் அந்தஅமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+