For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதிலடி குறித்து இந்திய ராணுவம் முடிவெடுக்கும்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல் இந்தியாவின் மீது நடந்துள்ள தாக்குதல்களிலேயே மிக அதிர்ச்சிகரமானதாக்குதல் என்பதால் இதற்கு பதிலடி கொடுப்பது குறித்து முடிவெடுப்பதை ராணுவத்திடம் விட்டுவிட மத்திய அரசுமுடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதுவரை ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளைத் தான் ராணுவம் அமலாக்கி வந்தது.ஆனால், இது மிக மோசமான தாக்குதல் என்பதால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ராணுவமேமுடிவெடுக்கட்டும் என பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

அவரது இல்லத்தில் நடந்த பாதுகாப்பு குறித்த கேபினட் கமிட்டியின் கூட்டத்தில் பேசிய அவர் ராணுவம் எடுக்கும்முடிவை நாம் ஆலோசித்து ஏற்போம் என்றார்.

அமெரிக்கா மீது கோபம்:

நம் நாட்டின் மீது நடந்த தாக்குதலை அமெரிக்கா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என இந்தியா கருதுகிறது.நியூயார்க்கின் மீது தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்கத் தயாராகஇருப்பதாக இந்தியா அறிவித்தது.

ஆனால், இப்போது இந்தியா மீது தாக்குதல் நடந்துள்ள நிலையில் அமைதியாக இருக்குமாறு அமெரிக்கா கூறிவருகிறது. தாக்குதல் குறித்து பாகிஸ்தான் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறி வெறுப்பேற்றி வருகிறது.

அதே போல இந்தியாவின் மீதான தாக்குதலை அமெரிக்கப் பத்திரிக்கைகளும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகபதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என அஞ்சுகிறேன். ஏதாவதுமோசமான சம்பவம் நடக்கும் முன் இரு தரப்பினருமே அமைதி காக்க வேண்டும் என்றார்.

பாகிஸ்தான் திருந்த வேண்டும் என்ற கருத்து இவர் வாயிலிருந்து வரவில்லை. ஆனால், அமெரிக்கவெளியுறவுத்துறையின் கீழ்மட்ட அதிகாரிகள் தான் பாகிஸ்தானுக்கும் அறிவுரை கூறும் வகையில் அறிக்கைவெளியிட்டு வருகின்றனர்.

இதை இந்தியா தனக்கு இழைக்கப்படும் அநீதியாகக் கருதுகிறது.

அமெரிக்கா இரட்டை வேடம்: ஆர்.எஸ்.எஸ். கண்டனம்

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஷன் கூறுகையில்,

தங்கள் மீது தாக்குதல் நடந்தவுடன் உலக நாடுகள் அனைத்தும் தன்னை ஆதரிக்க வேண்டும் என அமெரிக்காவிரும்பியது. ஆப்கானிஸ்தானைத் தாக்கியது.

ஆனால், இந்தியா மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறது. இதுஅமெரிக்காவின் இரட்டை வேடத்தைத் தான் காட்டுகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X