மும்பை: அல்-கொய்தா தீவிரவாதி ரகசிய வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பையில் பிடிபட்ட பின்-லேடனின் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்ரோஸ் அப்துல் ரசாக்இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றங்களை ஒப்புக் கொண்டு நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தான்.

இவன் ஆஸ்திரேலியாவில் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றவன். இவனை மும்பை போலீசார் ஒன்றரைமாதங்களுக்கு முன்பே கைது செய்துவிட்டனர். இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் நாடாளுமன்றத்தைத்தாக்க அல்-கொய்தா திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் தான் கடந்த வியாழக்கிழமை தாக்குதல்நடந்த வந்த தீவிரவாதிகளை வழியிலேயே மடக்கி சுட்டுத் தள்ள முடிந்தது.

இவனை இன்டலிஜென்ஸ் பீரோ சிறப்பாக கவனித்து விசாரணை நடத்தியது. இதையடுத்து அல்-கொய்தா குறித்துதனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும், அவர்களின் திட்டங்களையும், இந்தியாவில் தான் செய்ய இருந்தகுற்றங்களையும் ஒப்புக் கொண்டுவிட்டான். இதை நீதிமன்றத்திலும் வாக்குமூலமாக சொல்லிவிட ஒப்புக்கொண்டான்.

இதையடுத்து இன்று மிக பலத்த பாதுகாப்புடன் மும்பை கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டான். நீதிபதி வி.பி. தாவரே முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தான்.

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த வாக்குமூலம் ரகசியமாகப் பெறப்பட்டது. வழக்கறிஞர்கள்,பத்திரிக்கையாளர்கள், பொது மக்கள் யாரும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அரசுத் தரப்புவழக்கறிஞரான உஜ்வால் நிகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+