சென்னையில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை: 4 பேர் கைது
சென்னை:
சென்னையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள நகைக் கடையிலிருந்து நேற்று (திங்கள்கிழமை) ரூ.1கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. போலீசாரின் தீவிர வேட்டையில் 4கொள்ளையர்கள் பிடிபட்டனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பல்சானி நகைக் கடை என்ற கடை உள்ளது. இந்த நகைக் கடைக்கு நேற்றிரவுஇந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் நகை வாங்க வந்தவர்கள் போல வந்தார்கள்.
பின்னர் திடீரென கத்தி மற்றும் துப்பாக்கிகளைக் காட்டி நகைக் கடை ஊழியர்களை மிரட்டினர்.
அப்போது 3 நகைக் கடை ஊழியர்கள், கொள்ளையர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களில் சேகர் என்றநகைக் கடை ஊழியரை கொள்ளையர்கள் கத்தியால் வெட்டினர்.
பின்னர் ஊழியர்களை துப்பாக்கிகளால் மிரட்டி கடையில் இருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள நகைகளையும் ரூ.10ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு அக்கும்பல் தப்பியது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அக்கும்பல் வந்துள்ளது. தகவல் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த போலீசார்தென்சென்னையின் எல்லைப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.
அப்போது நான்கு கொள்ளையர்கள் பிடிபட்டனர். மேலும் 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.