For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவுக்கு ஓடும் முஷாரப்

By Staff
Google Oneindia Tamil News

பெய்ஜிங்:

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் நிலவுவதால் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் சீனாவின் ஆதரவு கோரி அந் நாட்டுக்கு ஓடுகிறார்.

பாகிஸ்தானுக்கு அனைத்து விதத்திலும் ஆதரவு தந்து இந்தியாவுக்கு மறைமுக நெருக்குதல் கொடுத்து வரும் நாடுசீனா. பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்கள் அனைவருக்குமே சீனா ஆதரவு தந்து வந்துள்ளது.

கார்கில் ஊடுருவலைக் கூட சீனாவில் இருந்தவண்ணம் தான் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் அப்போது ராணுவத்தளபதியாக இருந்த முஷாரப். அந்த ஊடுருவல் குறித்து அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கே இருட்டிப்புசெய்திருந்தார் முஷாரப்.

இந்தியா பதிலடித் தாக்குதலைத் தொடங்கியவுடன் சீனாவுக்கு ஓடிய அவர் அந் நாட்டின் உதவி கோரினார்.அங்கிருந்தவண்ணம் ஊடுருவலையும் தீவிரவாதிகள் தாக்குதலையும் ஒருங்கிணைத்தார்.

பெய்ஜிங்கில் இருந்துகொண்டு பாகிஸ்தானில் இருந்த ராணுவ அதிகாரிகளுடன் முஷாரப் தொலைபேசியில்பேசியதை இந்திய உளவுப் பிரிவு இடைமறித்துக் கேட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்தன. ஒட்டுகேட்கப்பட்டபேச்சையும் கூட இந்தியப் பத்திரிக்கைகளில் வெளியிடச் செய்தது மத்திய அரசு.

இப்போது மீண்டும் இந்தியாவிடமிருந்து பதிலடித் தாக்குதல் கிடைக்கலாம் என அஞ்சும் பர்வேஸ் தனதுநண்பனான சீனாவின் ஆதரவு கோரி அங்கு விரைகிறார்.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தியாளர் ஷான் குயியே கூறுகையில்,

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலைமை பதற்றமாக உள்ளது. இரு நாடுகளும் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும். பர்வேஸ் முஷாரப் சீனா வருகிறார். அவரது வருகையை மிக முக்கியமானதாகக் கருதுகிறோம்.

தீவிரவாதத்தை எந்த காலத்திலும் சீனா ஆதரிக்காது. இந்தியா மீது நடந்த தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X