For Daily Alerts
Just In
பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து அமெரிக்கா கவலை
வாஷிங்டன்:
இந்திய நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்கா கவலைதெரிவித்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்-ஏ-தொய்பாவும் ஜெய்ஸ்-ஏ-முகமதுவும் சேர்ந்துதான்இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கத் திட்டமிட்டுள்ளன என்பது டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஏற்கனவே இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல்லும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்கள் வைத்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது போர்புரியும் நிலைக்கு வந்துள்ளன என்றும்நிலைமை எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்றும் பாவல் கூறினார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]