பேச்சிப்பாறை அணையில் வெடிகுண்டு புரளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக வந்ததகவலையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று பேச்சிப்பாறை அணை.

இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகவும் அணைஅதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு அங்கு குண்டைத் தேடும் பணிநடந்தது.

அணையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால்அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பயணிகளும் அவசர அவசரமாக இடத்தைக் காலி செய்தனர்.

இருப்பினும் அணை முழுவதையும் சோதனையிட்டதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. அது வெறும்புரளிதான் என்று தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+