For Daily Alerts
Just In
தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கு விரைவில் தடை: டி.ஜி.பி. தகவல்
சென்னை:
தமிழக விடுதலைப் படை மற்றும் தமிழர் மீட்புப் படை போன்ற தீவிரவாத அமைப்புகள் விரைவில் தடைசெய்யப்படும் என்று தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த இயக்கங்களைத் தடை செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
தேவையான அனைத்து ஆதாரங்களும் கிடைத்தவுடன் அந்த இயக்கங்கள் நிச்சயம் தடை செய்யப்படும்.
நாடாளுமன்றத் தாக்குதலையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய-மாநில அரசு நிறுவனங்களுக்கும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜ்பவன், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டையும் தீவிரமடைந்துள்ளது. விரைவில் அவன் பிடிபடுவான் என்றால்நெய்ல்வால்.
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]