ஆண்டிப்பட்டியிலிருந்து மருங்காபுரி: தொகுதி மாற ஜெ. திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட திட்டமிட்டிருந்த ஜெயலலிதா, தற்போதுமருங்காபுரி தொகுதியில் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து வருகிறார்.

டான்சி வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்ட ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டால் வெற்றிபெறுவாரா என்று அவர் சந்தேகப்படுவதாக தெரிகிறது. காரணம் இத்தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றபோதெல்லாம் ஏதாவது அனுதாப அலை இருந்துள்ளது.

நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் விலைவாசி உயர்வு அலை வீசும் என்று கருதப்படுவதால், ஜெயலலிதாவின்வெற்றிக்கு பாதிப்பு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இத்தொகுதியில் உளவுத்துறையினர் நடத்திய ஆய்வுகளின் முடிவுகளின்படி, ஜெயலலிதாவுக்கு திருப்திகரமாகஅமையவில்லை என்று தெரிகிறது. விலைவாசி உயர்வால் அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில்இருப்பதாக உளவுத்துறையினர் கூறியுள்ளனர்.

இதனால் மருங்காபுரி, ஆண்டிப்பட்டி இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவது பற்றி ஜெயலலிதா தரப்பில்ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. மருங்காபுரி தொகுதி கிராமங்கள் நிறைந்த தொகுதி. மேலும் இங்குபோட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்றும் உளவுத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னையில் இருந்து ஒரு குழுவும், ஆளும்கட்சி டிவி சார்பில் தனிக் குழுவும் மருங்காபுரிதொகுதி முழுவதும் சென்று கிராம மக்களிடம் விலைவாசி உயர்வால் மாறுதல் ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வுசெய்து உள்ளனர்.

இம்மாதத்துக்குள் மருங்காபுரி எம்.எல்.ஏ., தனது பதவியை ராஜினாமா செய்தால்தான் மற்ற தொகுதிகளுடன்சேர்ந்து இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+