முன்னாள் ஆப்கான் மன்னரைச் சந்திக்கிறார் கார்சாய்
ரோம்:
ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னரான ஜாகிர் ஷாவை தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹமீத் கார்சாய்சந்தித்துப் பேசவுள்ளார்.
தலிபான் படையினர் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியவுடன் அங்கிருந்து ரோம் நகருக்கு வந்து தஞ்சம் புகுந்தார்ஜாகிர் ஷா.
தற்போது தலிபான்கள் ஆட்சி முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் ஜாகிர் ஷாஆப்கானிஸ்தானுக்குத் திரும்பவுள்ளார்.
அமைதிக் குழுவை அனுப்புகிறது இங்கிலாந்து:
இதற்கிடையே ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் சர்வதேச அமைதிக் குழுவில்,இங்கிலாந்தைச் சேர்ந்த 1,500 இங்கிலாந்துப் படையினரும் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் விரைவில் ஆப்கானிஸ்தானுக்கு வரவுள்ளனர். முதல் குழுவினர் இவ்வார இறுதிக்குள் வந்து சேருவார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின் லேடனைத் தண்டிக்கும் வரை இருப்போம் - அமெரிக்கா:
இந்நிலையில், சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் மற்றும் தலிபான் தலைவர் முல்லா ஒமர் ஆகியோரைப்பிடித்துத் தண்டிக்கும் வரை அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலேயே இருப்பார்கள் என்று அமெரிக்காகூறியுள்ளது.
அவர்களைப் பிடிப்பதற்கு நீண்ட காலமாகலாம். ஆனாலும் அவர்களைப் பிடிக்கும்வரை நாங்கள்ஆப்கானிஸ்தானை விட்டுப் போகமாட்டோம் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் டொனால்டு ரூம்ஸ்பெல்டுகூறியுள்ளார்.