2 அமெரிக்க விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தானில் 2 அமெரிக்க போர் விமானங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென்று ஏவுகணைத்தாக்குதலுக்கு உள்ளாயின.

ஆப்கானிஸ்தான் முழுவதுமே தலிபான் படையினரும் அல்-கொய்தா படையினரும் ஒழிக்கப்பட்ட அல்லதுசரணடைந்த நிலையில் இந்த ஏவுகணை எங்கிருந்து வந்து தாக்கியது என்பது குறித்து தெரியவில்லை.

அமெரிக்க மெரைன் படையினருக்குச் சொந்தமான சி-130 ரகத்தைச் சேர்ந்த இந்த 2 விமானங்களும்காண்டஹாருக்குத் தெற்கே வெவ்வேறு பகுதிகளில் பறந்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளன.

காண்டஹார் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க மெரைன் படையினருக்கு உணவு, மருந்துப்பொட்டலங்களைப் போடும் பணியில் இன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு ஈடுபட்டிருந்தபோதுதான் இந்தவிமானங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 23ம் தேதி அமெரிக்க மெரைன் படையினர் காண்டஹார் நகரில் இறங்கியதற்குப் பின்அவர்களுடைய விமானத்தின் மீது இப்போதுதான் முதன் முதலாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+