2 அமெரிக்க விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2 அமெரிக்க போர் விமானங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென்று ஏவுகணைத்தாக்குதலுக்கு உள்ளாயின.
அமெரிக்க மெரைன் படையினருக்குச் சொந்தமான சி-130 ரகத்தைச் சேர்ந்த இந்த 2 விமானங்களும்காண்டஹாருக்குத் தெற்கே வெவ்வேறு பகுதிகளில் பறந்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளன.
காண்டஹார் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க மெரைன் படையினருக்கு உணவு, மருந்துப்பொட்டலங்களைப் போடும் பணியில் இன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு ஈடுபட்டிருந்தபோதுதான் இந்தவிமானங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 23ம் தேதி அமெரிக்க மெரைன் படையினர் காண்டஹார் நகரில் இறங்கியதற்குப் பின்அவர்களுடைய விமானத்தின் மீது இப்போதுதான் முதன் முதலாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications