பாகிஸ்தானிடம் தீவிரவாதிகள் குறித்து ஆதாரங்கள் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான காரணம் என்பதைநிரூபிக்கும் ஆதாரங்களை அந் நாட்டு அதிபர் பர்வ்ேஸ முஷாரபுக்கு பிரதமர் வாஜ்பாய் அனுப்பி வைத்துள்ளார்.
தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகம்மத், லக்ஷர்-ஏ-தொய்பா ஆகிய பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் தான்காரணம் என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.
ஆதாரங்கள் தரப்பட்டுவிட்டதால், உடனடியாக அந்த இரு அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும்வாஜ்பாய் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆதாரங்கள் தந்தால் நடவடிக்கை எடுப்பதாக முஷாரப் கூறியதையடுத்து இந்தியா இந்த ஆதாரங்களைஅனுப்பியுள்ளது.
அமெரிக்காவும் ஆதாரங்கள் கேட்டு வருகிறது. அவர்களிடம் இவை தரப்படும் என்ற தெரிகிறது.
இதன் மூலம் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்காவை நெருக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications