பாகிஸ்தான் எப்படி நமக்கு உதவ முடியும்? வாஜ்பாய் கேள்வி
டெல்லி:
நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் குறித்து விசாரிக்க பாகிஸ்தானின் உதவி தேவையில்லை என பிரதமர்வாஜ்பாய் கூறினார்.
தீவிராதிகள் இருப்பது பாகிஸ்தானில் தான். அவர்களை உருவாக்கி அனுப்பி வைப்பதும் பாகிஸ்தான் தான்.எனவே, அவர்களுடன் சேர்ந்து தீவிரவாதிகள் குறித்து எப்படி விசாரிக்க முடியும்?
தீவிரவாதிகளை நாங்களே பிடித்துக் கொண்டு வருவோம்.
நம்மை அமைதியாக இருக்கும்படி அமெரிக்கா சொல்கிறது. அப்படிக் கேட்க அவர்களுக்கு என்ன உரிமைஇருக்கிறது என்று தெரியவில்லை.
டிசம்பர் 13ம் தேதி தெய்வாதீனமாகத் தான் நாடாளுமன்றமும் அனைத்துக் கட்சி எம்.பிக்களும் உயிர்தப்பியுள்ளனர். அதிர்ஷ்டவசமாகத் தான் இந்திய அரசியல் தலைமை தப்பித்திருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம்நடந்திருந்தால் இந்திய அரசியல் கட்டமைப்பே கலைந்து போயிருக்கும்.
நாம் தப்பி இருப்பது தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்காகத் தான் என்று கருதி செயல்பட வேண்டும்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை ஒழிப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications