For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொடோ மசோதா இன்று தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமான பொடோ இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படுகிறது.

பொடோ சட்டம் தொடர்பான மசோதாவைத் தாக்கல் செய்ய ஏற்கனவே மத்திய அரசு இரு முறை முயற்சிமேற்கொண்டது. ஆனால் சவப்பெட்டி ஊழல் தொடர்பாக எதிர்க் கட்சிகள் செய்த அமளியால் அவைநடவடிக்கைகளே ஒத்திவைக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியது

இதனால் பொடோ மசோதாவைத் தாக்கல் செய்யப்படுவதும் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வந்தது. பொடோசட்டத்தைக் கொண்டு வருவதற்கும் எதிர்க் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தன. சில திருத்தங்களுடன்பொடோவை எப்படியாவது தாக்கல் செய்துவிட வேண்டும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது.

இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை (டிச.13) நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்கினர். ஆனால்தீவிரவாதிகளின் திட்டத்தை பாதுகாப்பு வீரர்கள் முறியடித்து, அவர்களைக் கொன்றும் விட்டனர்.

இதனால் இதற்குப் பிறகாவது, எதிர்க் கட்சிகள் இந்தச் சட்டத்தைத் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்று மத்திய அரசு நம்புகிறது. இதையடுத்து, எந்தவிதத் திருத்தமும் இல்லாமலேயே பொடோவைத்தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பொடோ சட்டம் இடம் பெற்று இருக்கிறது.நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அத்வானி அறிக்கையை இன்று தாக்கல்செய்கிறார்.

அதைத் தொடர்ந்து பொடோ சட்டத்தையும் அவர் தாக்கல் செய்கிறார். இன்று தவறவிட்டால் மீண்டும் பலகாரணங்களுக்காக இதைத் தாக்கல் செய்வது தள்ளிப் போகலாம் என்று கருதும் மத்திய அரசு, இன்று எப்படியும்பொடோ சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X