For Daily Alerts
Just In
ரயில் தாமதம்: கோவையில் பயணிகள் மறியல்
சென்னை:
ரயில் தாமதமாக வந்ததால் கோவை பீளமேடு பகுதியில் பயணிகள் திடீரென்று ரயில் மறியல் போராட்டம்நடத்தினார்கள்.
பாலக்காடு-திருச்சி இடையே ஓடும் ரயில் எப்போதுமே தாமதமாக வந்து செல்வதாகப் புகார் கூறிய பயணிகள்,பீளமேடு ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த ரயில்வே மற்றும் காவல்துறை அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]