For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.1 கோடி கொள்ளை: கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் திங்கள்கிழமை நகைக் கடையில் நடந்த ரூ. 1 கோடி கொள்ளை தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவன் மதுரையைச் சேர்ந்த ரவுடி பக்ருதீன் என்ற சிராஜூதீன் என்பது தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக பக்ருதீன் உள்பட 4 பேர் திங்கள்கிழமை இரவே கைது செய்யப்பட்டுவிட்டனர்.

அவர்கள் பிடிபட்ட விவரம்:

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பல்சானி நகைக் கடை என்ற கடை உள்ளது. இந்த நகைக் கடைக்குதிங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் நகை வாங்க வந்தவர்கள் போல நடித்தது.

பின்னர் திடீரென கத்தி மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளைக் காட்டி நகைக் கடை ஊழியர்களை மிரட்டினர்.

அப்போது 3 நகைக் கடை ஊழியர்கள், கொள்ளையர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களில் சேகர் என்றநகைக் கடை ஊழியரை கொள்ளையர்கள் கத்தியால் வெட்டினர்.

மேலும் நகைக் கடையின் உரிமையாளர் அசோர் பல்சானியையும் தாக்கிவிட்டு

கடையில் இருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள நகைகளையும் ரூ.10 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டுஅக்கும்பல் தப்பியது.

முன்னதாக அந்தத் நாட்டுத் துப்பாக்கியை சரியாக இயக்கத் தெரியாமல் ஆட்டியதில் 5 குண்டுகள் கீழே விழுந்தன.

நகைகளை எடுத்துக் கொண்டு இக் கும்பல் ஆளுக்கொரு பக்கமாக தப்பி ஓடினர். இதையடுத்து கடைக் காரர்கள்எழுப்பிய உதவிக் குரலைக் கேட்டு பொதுமக்களில் 5 பேர் விரட்டிச் சென்று ஒருவனைப் பிடித்தனர். அவன் பெயர்பக்ருதீன். மதுரையைச் சேர்ந்த ரவுடி.

இவன் கொடுத்த தகவலின்பேரில் பெரியமேடு பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த அலெக்ஸ், ஷகீல் ராஜ்ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டவர்:

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இன்னொருவனும் பிடிபட்டான். இவன் பெயர் அக்ரம் கான்.அரும்பாக்கத்தைச் சேர்ந்த இவர் கடந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்துப்போட்டியிட்டவன். இஸ்லாமிய ஜனநாயகக் கட்சி என்ற ஒரு கட்சியை நடத்தி வரும் இவன் அதன் சார்பில் தான்போட்டியிட்டான்.

முன்பு ஜிகாத் கமிட்டி என்ற அமைப்பில் இருந்த இவன் அந்த அமைப்பை தமிழக அரசு தடை செய்தபாது கைதுசெய்யப்பட்டான். தடா கைதியாக மதுரை சிறையில் இருந்தபோது அந்த ஊர் ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.இவர்களின் உதவியுடன் தான் இப்போது இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளான்.

இந்த 4 பேர் தவிர மதுரையைச் சேர்ந்த ரெக்ஸ், ஆடடோ பாஸ்கர், குண்டுமணி மற்றும் இன்னொருவனுக்கும் இக்கொள்ளையில் தொடர்புள்ளது. இவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இவர்களைப் பிடிக்க தனிப் படைகள்அமைக்கப்பட்டு மதுரை, காஞ்சிபுரம், ஹைதராபாத், பெங்களூர், வேலூர் ஆகிய இடங்களுக்கு விரைந்துள்ளன.

கைதான கும்பலிடமிருந்து இதுவரை ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் தான் சிக்கியுள்ளன என போலீசார்தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X