For Daily Alerts
Just In
பஸ் ஊழியர்கள் சம்பளம் "கட்": தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பஸ் ஊழியர்களின் சம்பளம் "கட்" செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்குசென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 16 நாட்களுக்கும் சம்பளம் வழங்க முடியாது என்று தமிழக அரசுஅறிவித்திருந்தது.
இதை எதிர்த்து பஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் வந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டது.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]