For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலிபான்கள் ஆட்சியில் தப்பிய துர்கா கோவில்

By Staff
Google Oneindia Tamil News

அஸ்மால் வாட் (ஆப்கானிஸ்தான்):

ஆப்கானிஸ்தானில் உள்ள நூறாண்டு பழமை மிக்க ஒரு துர்கா கோவில் தலிபான்களின் ஆட்சியில் எந்தவிதமானசிக்கலோ பிரச்சனையோ இல்லாமல் தப்பித்துள்ளது.

"துர்கை அம்மன் அவ்வளவு சக்தி வாய்ந்தவள். தலிபான்களோ அல்லது வேறு யாரோ துர்கா கோவிலை ஒன்றும்செய்துவிட முடியாது. இதனால் நாங்களும் யாருக்கும் பயப்படுவது கிடையாது" என்கிறார் இந்தக் கோவிலின்பூஜாரி உத்தம் சந்த்.

தன்னை ஒரு பூஜாரி என்று சொல்லிக் கொண்டாலும், 60 வயது நிரம்பிய உத்தம் சந்த் முஸ்லீம்களைப்போலவேதான் உடைகளை அணிந்துள்ளார். முகத்திலும் முஸ்லீம்களைப் போலவே தாடியும் வளர்த்து, தலையில்தொப்பியும் வைத்துள்ளார்.

ஆனால் தான் பூணூலும் அணிந்துள்ளதைப் பெருமையாகக் காண்பிக்கிறார் உத்தம் சந்த்.

இங்குள்ள இந்துக்கள் தலிபான்களைப் போற்றவும் இல்லை; தூற்றவும் இல்லை. "புர்கா அணியாமல் நாங்கள்பலமுறை வெளியே சென்றுள்ளோம். ஆனால் எங்களை தலிபான்கள் ஒன்றுமே செய்யவில்லை" என்கிறார்கள்இங்குள்ள சில இந்துப் பெண்கள்.

தலிபான்கள் ஆட்சியில் டாக்சி டிரைவர்களான நீதிபதிகள்:

தலிபான்கள் ஆட்சியின்போது ஏற்பட்ட கெடுபிடிக்கு அங்குள்ள நீதிபதிகளும் தப்பவில்லை.

டிகிரி டிகிரியாக சட்டம் படித்து நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த நீதிபதிகளை எல்லாம் தலிபான்கள்வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்படி அனுப்பப்பட்ட பல நீதிபதிகள், இன்னும் டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X