6 லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
காஷ்மீர்:
காஷ்மீரில் ராணுவம் நடத்திய இரு தாக்குதல்களில் லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர்.நேற்றிரவு இத் தாக்குதல்கள் நடந்தன.
அவர்களிடமிருந்து 3 ஏ.கே.-47 துப்பாக்கிகள், 88 குண்டுகள் நிரம்பிய 6 மேகசின்கள், 3 கையெறிகுண்டுகள், டயரிஆகியவை கைப்பற்றப்பட்டன.
அதே போல வட காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பாரம்புரா என்ற இடத்தில் ரோந்து சென்றராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் சுட்டனர். இதையடுத்து ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானைச்சேர்ந்த அபு முரீத் கஸ்நவி, முகம்மக் ஆசிப், அபு ஹபீப் ஆகிய லக்ஷர் அமைப்பின் தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
இவர்களிடமிருந்தும் 3 ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், 348 குண்டுகள் அடங்கிய 3 மேகசீன்கள், 8 கிரனைட்கள்,வயர்லெஸ் கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications