காயமடைந்த மாணவர்களின் மருத்துவச் செலவை அரசு ஏற்கும்: பன்னீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காயமடைந்த சட்டக் கல்லூரி மாணவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழகமுதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
விடுதிக்குள் புகுந்து போலீசார் தாக்கிய சம்பவம் தொடர்பாக அரசு நியமித்துள்ள விசாரணைக் கமிஷனின்பரிந்துரைகளை அரசு ஏற்று செயல்படும்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளையும் அரசு ஏற்கும்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணத் தொகையாக இல்லாமல், காயத்தின் அடிப்படையில் அவர்களுக்குஏற்பட்டுள்ள மருத்துவச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.
விசாரணைக் கமிஷன் அறிக்கை வந்த பிறகு, போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்என்றார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications