எல்லையில் பாக். சிறப்புப் படை: போர் பயத்தில் காஷ்மீர்

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ:

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் என பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் கருதுகின்றனர்.

ரம்ஜான் மாதம் முடிந்துள்ள நிலையில் அங்கு போர் பயம் பரவ ஆரம்பித்துள்ளது. பெரும்பான்மையான மக்கள்இம் முறை இந்தியா நிச்சயம் போர் தொடுக்கும் என கருதுகின்றனர்.

பாகிஸ்தானின் சிறப்புப் படைகள் குவிப்பு:

இந் நிலையில் எல்லைப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படைகளையும் (எஸ்.எஸ்.ஜி.) பாகிஸ்தான் நிறுத்தி வருகிறது.ஜம்மூ-பூஞ்ச் பகுதியில் சர்வதேச எல்லையிலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலும் இந்தப் படைகள்நிறுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் ராணுவத்தின் எஸ்.எஸ்.ஜி. மோசஸ் எனப்படும் அந்தப் படைப் பிரிவு கிட்டத்தட்ட தீவிரவாத அமைப்புபோல செயல்பட்டு தாக்குதல் நடத்தும் ஒரு பிரிவாகும். இவர்கள் நிறுத்தப்பட்டுள்ளதை இந்திய ராணுவத்தின்உளவுப் பிரிவுகள் கண்டறிந்துள்ளன.

இங்கிருந்தவண்ணம் அல்-பாதர், லக்ஷர்-ஏ-தொய்பா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளின்உதவியுடன் எல்லையில் தாக்குதல் நடத்த இந்தப் படை திட்டமிட்டுள்ளது. இதற்காக எல்லை செயல் குழு என்றபுதிய பிரிவையும் இந்த சிறப்புப் படை உருவாக்கியுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் 10-வது பலூச் தரைப் படை மற்றும் 19-வது பலூச் விமானப் படை பிரிவுகளைச் சேர்ந்தவீரர்கள் அடங்கியது தான் இந்த மோசஸ் படை. இவர்கள் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளில் பயிற்சி பெற்றவர்கள்.

எதிர் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவ முகாம்கள், தகவல்-தொடர்பு மையங்கள், கிடங்குகளை அழிக்கும்பயிற்சி பெற்றவர்கள். ஒவ்வொரு பிரிவிலும் 2,500 வீரர்கள் இருப்பர். 1971ம் ஆண்டு இந்தியாவுடன் நடந்தபோரின்போது இந்தப் பிரிவினர் ஜம்மூவில் பல தாக்குதல்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் போரில் பாரமுல்லா, ரஜெளரி ஆகிய இடங்களில் விமானத் தாக்குதல்களையும் இப் படைகள் நடத்தின.பாகிஸ்தானின் வட பகுதியில் உள்ள அபோட்பாட் என்ற மலைப் பகுதியில் இப் பிரிவின் பயிற்சி மையம் உள்ளது.

எல்லையில் சண்டை தொடர்கிறது:

இந் நிலையில் எல்லைப் பகுதியில் இந்திய, பாகிஸ்தானிய வீரர்கள் கனரக துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல்நடத்தி வருகின்றனர்.

நேற்று ஆரம்பித்த இந்த மோதல் இரவு முழுவதும் நடந்தது.

இன்று காலையும் தொடர்ந்து சண்டை நடந்தவண்ணம் உள்ளது. முதலில் துப்பாக்கிச் சூட்டில் ஆரம்பித்த மோதல்பின்னர் கனரக மார்ட்டர் துப்பாக்கிச் சண்டையாக மாறியது.

இந்திய வீரர்கள் மீது 91 எம்.எம். ரக மார்ட்டர் துப்பாக்கிகளால் பாகிஸ்தான் வீரர்கள் சுட்டனர். இதையடுத்துஇந்திய வீரர்கள் 89 எம்.எம். ரக துப்பாக்கிகளால் சுட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+