கற்பழிப்பு முயற்சி: ஒட்டன்சத்திரத்தில் போலி சாமியார் கைது

Subscribe to Oneindia Tamil

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரத்தில் பெண்ணைக் கற்பழிக்க முயற்சித்த போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கியன்கோட்டையைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (45). ஒருநூற்பாலையில் வேலைபார்த்து வந்த இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திடீரென்று வேலையை உதறிவிட்டுசாமியார் ஆனார்.

அதே ஊரில் உள்ள ஒரு கோவில் முன் சிறிய குடிசை போட்டு குறி சொல்ல ஆரம்பித்துவிட்டார் பொன்ராஜ்.அவரிடம் குறி கேட்க நிறையப் பேர் வர ஆரம்பித்தனர். இதனால் அவருக்கு வசதி பெருகி, சொந்தமாகக் காரும்வாங்கிவிட்டார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக மயக்க நிலையில் இருக்கும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி (45)என்பவரை அவருடைய மனைவி ஈஸ்வரி (38) கடந்த சில நாட்களுக்கு முன் பொன்ராஜிடம் அழைத்து வந்தார்.

அப்போது ஈஸ்வரியிடம் "நீங்கள் இனிமேல் இங்கு வரவேண்டாம். நானே அங்கு வந்து சிகிச்சை செய்கிறேன்"என்று பொன்ராஜ் கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் முத்துச்சாமி வீட்டுக்கு வந்த பொன்ராஜ், அவருக்கு வைத்தியம்பார்த்தாராம். பின்னர் மறுநாள் மீண்டும் அங்கு சென்ற பொன்ராஜ், ஈஸ்வரியிடம் ஒரு காதல் கடிதத்தைக் கொடுத்துபடிக்கச் சொல்லியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஈஸ்வரியின் கையைப் பிடித்து இழுத்து அவரை மானபங்கப்படுத்த முயற்சித்தார் பொன்ராஜ்.இதை எதிர்பார்க்காத ஈஸ்வரி கூச்சல் போட்டார்.

சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பொன்ராஜைப் பிடித்து ஒட்டன்சத்திரம் போலீசாரிடம்ஒப்படைத்தனர். போலீசார் அவரைக் கைது செய்து, அவர் மீது இரு வழக்குகளைப் பதிவு செய்தனர்.

ஒட்டன்சத்திரத்தில் சித்த மருத்துவராக இருக்கும் ராஜ விருமான்டி என்பவர்தான் ஈஸ்வரியை சாமியாரிடம்செல்லும்படி கூறியுள்ளார். இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+