கற்பழிப்பு முயற்சி: ஒட்டன்சத்திரத்தில் போலி சாமியார் கைது
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் பெண்ணைக் கற்பழிக்க முயற்சித்த போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கியன்கோட்டையைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (45). ஒருநூற்பாலையில் வேலைபார்த்து வந்த இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திடீரென்று வேலையை உதறிவிட்டுசாமியார் ஆனார்.
அதே ஊரில் உள்ள ஒரு கோவில் முன் சிறிய குடிசை போட்டு குறி சொல்ல ஆரம்பித்துவிட்டார் பொன்ராஜ்.அவரிடம் குறி கேட்க நிறையப் பேர் வர ஆரம்பித்தனர். இதனால் அவருக்கு வசதி பெருகி, சொந்தமாகக் காரும்வாங்கிவிட்டார்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக மயக்க நிலையில் இருக்கும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி (45)என்பவரை அவருடைய மனைவி ஈஸ்வரி (38) கடந்த சில நாட்களுக்கு முன் பொன்ராஜிடம் அழைத்து வந்தார்.
அப்போது ஈஸ்வரியிடம் "நீங்கள் இனிமேல் இங்கு வரவேண்டாம். நானே அங்கு வந்து சிகிச்சை செய்கிறேன்"என்று பொன்ராஜ் கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் முத்துச்சாமி வீட்டுக்கு வந்த பொன்ராஜ், அவருக்கு வைத்தியம்பார்த்தாராம். பின்னர் மறுநாள் மீண்டும் அங்கு சென்ற பொன்ராஜ், ஈஸ்வரியிடம் ஒரு காதல் கடிதத்தைக் கொடுத்துபடிக்கச் சொல்லியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஈஸ்வரியின் கையைப் பிடித்து இழுத்து அவரை மானபங்கப்படுத்த முயற்சித்தார் பொன்ராஜ்.இதை எதிர்பார்க்காத ஈஸ்வரி கூச்சல் போட்டார்.
சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பொன்ராஜைப் பிடித்து ஒட்டன்சத்திரம் போலீசாரிடம்ஒப்படைத்தனர். போலீசார் அவரைக் கைது செய்து, அவர் மீது இரு வழக்குகளைப் பதிவு செய்தனர்.
ஒட்டன்சத்திரத்தில் சித்த மருத்துவராக இருக்கும் ராஜ விருமான்டி என்பவர்தான் ஈஸ்வரியை சாமியாரிடம்செல்லும்படி கூறியுள்ளார். இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications