சீனாவில் பாகிஸ்தான் அதிபர்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் 4 நாள் பயணமாக சீனா போய்ச் சேர்ந்தார்.
இந் நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதல் போக்கை கடைபிடிப்பது குறித்து கவலையடைந்துள்ளதாக சீனாகூறியுள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாங் குயியே இன்று (வியாழக்கிழமை)கூறுகையில்,
நாங்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நட்பு நாடாகவே இருக்க விரும்புகிறோம். இரு தரப்பினரும் பேச்சுநடத்தி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றார்.
இந்த விவகாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 3வது முறையாக சீனா தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜியாங் ஜெமினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், ஆயுதஉதவியும் கோருவார் என்று தெரிகிறது. இந்திய-பாகிஸ்தானிய போர் அபாயம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications