நாங்கள் தாக்கவில்லை: மீண்டும் மறுக்கிறது ஜெய்ஷ்-ஏ-முகம்மத்
காஷ்மீர்:
நாடாளுமன்றத்தின் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ஜெய்ஷ்-ஏ-முகம்மத் மறுத்துள்ளது.
காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல் நடத்தி 40 பேரைக் கொன்ற இந்த அமைப்பு முதலில் அத் தாக்குதலுக்குப்பொறுப்பேற்றது. ஆனால், பாகிஸ்தான் அரசின் நிர்பந்தத்தை அடுத்து இத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை எனமறுத்தது.
இப்போதும் பாகிஸ்தான் யோசனைப்படி தான் இத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என இந்த அமைப்புமறுப்பதாக இந்தியா கருதுகிறது.
காஷ்மீரிரைச் சேர்ந்த ஒரு உருது பத்திரிக்கைக்கு இந்த அமைப்பு அனுப்பியுள்ள அறிக்கையில்,
இந்திய நாடாளுமன்றத்தை நாங்கள் தாக்கவில்லை. ஆனால், விரைவில் மிகக் கடுமையான தாக்குதலைநடத்துவோம். பா.ஜ.க. ஆட்சியைவிட்டு விலகும் அளவுக்கு மிக மோசமான நிலையை உருவாக்குவோம்.
எங்கள் அமைப்பின் கமாண்டர் அபு ஹிராத் தலைமையில் நடந்த கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாமுழுவதும் தாக்குதல் நடத்துவோம். தவறுகளை அரசு திருத்திக் கொள்ளாவிட்டால் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தாக்குதல்கள் நடக்கும்.
ஜம்மூ-காஷ்மீர் முழுவதும் வரும் நாட்களில் தாக்குதல் தீவிரமாகும். எங்களிடம் மிக நவீன ஆயுதங்கள் உள்ளன.அவற்றைக் கொண்டு இந்திய ராணுவத்தினரைத் தாக்குவோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஹம்ஸாகையெழுத்திட்டுள்ளார்.
இந்தத் தீவிரவாத அமைப்பின் தலைவனான மெளலான மசூத் அஸார் பாகிஸ்தானில் வசித்து வருகிறான்.சுதந்திரமாக வலம் வரும் இவனை மதத் தலைவர் என்கிறது பாகிஸ்தான். ஆனால், இந்திய சிறையில் இருந்தஇவனை இந்திய விமானத்தைக் கடத்திச் சென்று விடுதலை செய்ய வைத்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்பதுகுறிப்பிடத்தக்கது.
இவனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அத்வானி கோரியுள்ளார்.