இந்தியாவுக்குள் ஊடுருவிய 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஊடுருவிய 8லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைக் கண்ட இந்திய ராணுவ ரோந்துப் படையினர் அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.தீவிரவாதிகளும் பதிலுக்குச் சுட்டனர்.
இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே அங்கு கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இன்று அதிகாலைவரை நடந்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில் எல்லைக் கோட்டைத் தாண்டிய ஐந்து தீவிரவாதிகளுமே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ஐந்து தீவிரவாதிகளும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லக்ஷர்-ஏ-தொய்பாவைச்சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ரஜெளரி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்னர்.












Click it and Unblock the Notifications