For Daily Alerts
Just In
தீவிரவாதி மாறன் திருச்சி ஜெயிலுக்கு மாற்றம்
சென்னை:
சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரானமாறன் இன்று (வியாழக்கிழமை) திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டான்.
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மாறனை விசாரணை நடத்துவதற்காக சென்னைமத்திய சிறைச்சாலையில் போலீசார் அடைத்திருந்தனர்.
ஆனால் பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக, மாறனை திருச்சி சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சென்னை சிறையிலிருந்து மாறன் திருச்சி சிறைக்கு இன்றுகொண்டுவரப்பட்டான். இதனால் சென்னை-திருச்சி சாலை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முக்கியமாக, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் மாறனைக் கொண்டு வரும் வழியில் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் மாறன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]