நாடாளுமன்றத் தாக்குதல் தோற்றது ஏன்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தைத் தாக்க வந்த தீவிரவாதிகள் குழுவின் தலைவன் முதலில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதால்தான் அவர்களால் முழுமையான அளவில் தாக்குதல் திட்டத்தை அமல்படுத்த முடியாமல் போய்விட்டதாகத்தெரிகிறது.
இவர்களுடன் தொடர்புள்ளதாகக் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விவரங்கள்தெரிய வந்தன.
ஆனால், நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுடன் இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில்முதலில் இறந்தது இக் கும்பலின் தலைவன் முகம்மத். இதனால், இவனுடன் வந்தவர்கள் குழம்பிப் போய்விட்டனர்என விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழம்பிப் போன அவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஒருவன் ஓடும்போது தடுமாறி கீழேவிழுந்துவிட்டான். அந்த அளவுக்கு குழப்பத்தில் இருந்தது அக் கும்பல்.












Click it and Unblock the Notifications