ஆப்கானிஸ்தான்: அமைதிப் படை தயார்

Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தானில் வரும் 22ம் தேதி புதிய அரசு பதவி ஏற்கவிருப்பதைத் தொடர்ந்து, இங்கிலாந்துதலைமையிலான அமைதிப் படைகள் அந்நாட்டில் குவிக்கப்படவுள்ளன.

புதிய அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அமைதிப் படைகள் கவனித்துக் கொள்ளும்.

ஆப்கானிஸ்தானில் முழுமையான அமைதி நிலவும் வரை இந்த அமைதிப் படைகள் இங்கேயே தங்கி, அந்நாட்டின்பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளன.

சுமார் 5,000 வீரர்கள் இந்த அமைதிப் படையில் இருப்பார்கள். இவர்களில் 1,500 பேர் இங்கிலாந்து வீரர்கள்.

வரும் டிசம்பர் 28ம் தேதி முதல் படிப்படியாக ஆப்கானிஸ்தானில் அமைதிப் படைகள் குவிக்கப்படவுள்ளன.

அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த அமைதிப் படையினர் ஆப்கானிஸ்தானில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிய வீரர்களுக்கு தடை:

இதற்கிடையே தலைநகர் காபூலில் ஆப்கானிய வீரர்கள் யாரும் ஆயுதங்களுடன் நடமாடக் கூடாது என்றுஅந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவ்வீரர்கள் தெருக்களில்நடமாட விரும்பினால் தடையில்லை, ஆனால் ஆயுதங்களில்லாமல்தான் நடக்க வேண்டும் என்றும் அந்தஅமைச்சகம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+