இந்திய-பாக். சண்டைக்கு இதுவல்ல நேரம்: அமெரிக்கா
வாஷிங்டன்:
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, தீவிரவாதத்துக்கு எதிரானநடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க இரு நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே நாடாளுமன்றத் தாக்குதல் பற்றிய ஆதாரங்களை பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
தங்கள் நாட்டில் பின் லேடன் தாக்குதல் நடத்தியவுடன் உடனடியாகச் செயல்பட்டு ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுத்த அமெரிக்கா, தற்போது பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தக் கூடாது என்று தொடர்ந்து கூறிவருகிறது.
இதற்காக தினமும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசி வருகிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல்.
ஆனால் இப்படி இரட்டை வேடம் போடும் அமெரிக்காவின் அறிவுரையே தேவையில்லை என்று இந்தியாவும்தொடர்ந்து மறுத்து வருகிறது.