பாகிஸ்தானைத் தாக்க இதுதான் சரியான தருணம்: வைகோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நமது பொறுமை எல்லை கடந்து விட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கையை எடுக்கஇதுதான் தகுந்த நேரம் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மீதான தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக உள்துறை மந்திரி அத்வானி தாக்கல் செய்தஅறிக்கை மீது நேற்று 2வது நாளாக விவாதம் நடந்தது. அப்போது மதிமுக பொது செயலாளர் வைகோபேசியதாவது:

நாடாளுமன்ற தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஜ.எஸ்.ஐ. தான் திட்டம் தீட்டியுள்ளது. இவர்கள்தான் தலிபான்களையும் ஆதிரித்தவர்கள்.

தாக்குதல் தொடர்பாக வெளியுறவு இலாகா மூலம் ஒரு விதமாகவும், ராணுவம் சார்பில் வேறு விதமாகவும், ஆகஇரண்டு விதமாக பாகிஸ்தான் பேசுகிறது.

ஆப்கானிஸ்தனில் இருந்து விரட்டப்பட்ட தலிபான்கள் ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் இந்தியாவில் தாக்குதல்நடத்துவார்களோ என்று அஞ்சுகிறேன்.

நமது பொறுமை, கட்டுப்பாடு எல்லை கடந்து விட்டது. இது தான் சரியான நேரம். தீவிரவாதிகளுக்கு எதிராக தகுந்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+