For Daily Alerts
Just In
பாகிஸ்தானைத் தாக்க இதுதான் சரியான தருணம்: வைகோ
டெல்லி:
நமது பொறுமை எல்லை கடந்து விட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கையை எடுக்கஇதுதான் தகுந்த நேரம் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஜ.எஸ்.ஐ. தான் திட்டம் தீட்டியுள்ளது. இவர்கள்தான் தலிபான்களையும் ஆதிரித்தவர்கள்.
தாக்குதல் தொடர்பாக வெளியுறவு இலாகா மூலம் ஒரு விதமாகவும், ராணுவம் சார்பில் வேறு விதமாகவும், ஆகஇரண்டு விதமாக பாகிஸ்தான் பேசுகிறது.
ஆப்கானிஸ்தனில் இருந்து விரட்டப்பட்ட தலிபான்கள் ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் இந்தியாவில் தாக்குதல்நடத்துவார்களோ என்று அஞ்சுகிறேன்.
நமது பொறுமை, கட்டுப்பாடு எல்லை கடந்து விட்டது. இது தான் சரியான நேரம். தீவிரவாதிகளுக்கு எதிராக தகுந்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் வைகோ.
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]