தமிழகத்தில் 2 சதவிகித கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ்
சென்னை:
தமிழகத்தில் சோதனை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களில் 2 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாககலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறிவுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான கே.ஏ.வான்ராம்போஎன்பவர் 12 ஆண்டுகளாக குரங்குகளை வைத்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளார்.
இவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் இந்தியாவிற்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு சம்பந்தமாக 1997ம் ஆண்டு முதல் நான்கு முறை வந்துள்ளேன். நான்சேகரித்த விவரப்படி இந்தியாவில் 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்களை சோதித்ததில், அவர்களில் இரண்டு சதவிகிதம் பேருக்கு எய்ட்ஸ் நோய்பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்கள்மொத்தம் 16 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உகாண்டா நாட்டில் அதிகரித்து வந்த எய்ட்ஸ் நோய் அந்த நாட்டின் தீவிர முயற்சியால் விழிப்புணர்வு மூலம்குறைந்துள்ளது.
அதனால் தமிழகத்திலும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், செந்துறை ஒன்றியங்களில் முதல் கட்டமாக எய்ட்ஸ்விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உறவினர்களால் அனாதையாக்கப்பட்டு ஆதரவற்றுள்ள ஏழைகளுக்கு ரீடுதொண்டு நிறுவனம் மூலம் காப்பகம் ஒன்று அமைக்க முயற்சித்து கொண்டு இருக்கிறோம் என்று அவர்நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications