சென்னை விமான நிலைய பாதுகாப்பை சி.ஐ.எஸ்.எப். ஏற்றது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையப் பாதுகாப்புப் பணியை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.)ஏற்றுக் கொண்டது.
அமெரிக்காவின் மீதான விமான தாக்குதலை அடுத்து அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு பாதுகாப்பைதீவிரமாக்கின. இந்தியாவும் நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், கட்டடங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பைஅதிகரித்தது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சி.ஐ.எஸ்.எப். படையினர் பயிற்சிமேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அப்படையினர் விமான நிலையத்தின் முழுப் பாதுகாப்புப் பணியையும்ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக தமிழகப் போலீசார்தான் சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்புப் பணியைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
சி.ஐ.எஸ்.எப்பைச் சேர்ந்த சுமார் 600 வீரர்கள் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications