For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லக்ஷர்-ஏ-தொய்பாவுக்கு அமெரிக்கா தடை: சொத்துக்களை முடக்க புஷ் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பை தடை செய்யவும் அதன்சொத்துக்களை முடக்க அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த அமைப்பு அமெரிக்காவின் தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது. ஆனால், இப்போதுதான் தடை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கும் இந்தத் தீவிரவாத அமைப்புக்கும் எந்தத் தொடர்பும்இல்லை என்று கூறி தனது புத்தியையும் அமெரிக்கா காட்டியுள்ளது.

நேற்று புஷ் நிருபர்களிடம் கூறுகையில்,

லக்ஷர்-ஏ-தொய்பா காஷ்மீரில் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு) இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகசெயல்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவுகளை இந்த அமைப்பு சீர்குலைத்து வருகிறது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்றம் தாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பேச்சுசுதந்திரத்தையும், மத சுதந்திரத்தையும் வழங்கியுள்ள மிகச் சுதந்திரமான அந்த நாட்டின் மீது நடந்துள்ள தாக்குதல்கடுமையாக கண்டிக்கத்தக்கது.

8 அப்பாவி இந்தியர்களும் அதில் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சட்டசபையைத் தாக்கிய தீவிரவாதிகள்இப்போது நாடாளுமன்றத்தையும் தாக்கியுள்ளதன் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தையேகேள்விக்குறியாக்கியுள்ளனர்.

இந்தத் தீவிரவாதிகளை இந்தியப் படைகள் தடுத்திருக்காவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றஉறுப்பினர்களை கொன்று குவித்திருப்பார்கள். இந்தியாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் உயிரிழந்தவர்களின்குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அமைப்பை எந்த நாடும் ஆதரிக்கவில்லை. (பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை என்கிறார் புஷ்). பாகிஸ்தான்அதிபர் பர்வேஸ் முஷாரபின் முக்கியத்துவத்தைக் கெடுக்கவும் இந்த அமைப்பு முயல்கிறது. இந்தியா, பாகிஸ்தான்இரு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு லக்ஷர்-ஏ-தொய்பாவை ஒழிக்க அமெரிக்கா முயலும்.

உலகின் எந்தப் பகுதியில் தீவிரவாதம் தலையெடுத்தாலும் அமெரிக்கா அதை எதிர்த்துத் தாக்கும் என்றார் புஷ்.

பாகிஸ்தானின் இன்னொரு அமைப்புக்கும் தடை:

பாகிஸ்தான் அணு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட யு.டி.என். என்ற அமைப்புக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

இது குறித்து புஷ் கூறுகையில்,

சேவை அமைப்பு என்ற பெயரில் இந்த அமைப்பு அணு ஆயுதங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி பின்லேடனுக்குகொடுத்து வந்துள்ளது. இந்த அமைப்பையும், அதன் 3 இயக்குனர்களையும் தடை செய்து உத்தரவிடுகிறேன்.இவர்களின் அமெரிக்க சொத்துக்கள் முடக்கப்படும்.

இவர்களை ஆதரிக்கும் யாருடனும் அமெரிக்கா உறவு வைத்துக் கொள்ளாது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X