பிரதமர் தலைமையில் பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான கேபினட் கமிட்டிக் கூட்டம் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இன்று நடந்தது.

காலையில் பிரதமரின் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்தில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டுவருவது குறித்தும், இந்தியப் படைகளின் தயார் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் ராணுவ, விமானப் படை, கடற்படைத் தளபதிகளும், பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் பிரதமரின் பாதுகாப்புஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகரும் அணு விஞ்ஞானியுமான சிதம்பரம்ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்க அரசு மறுத்துவிட்டது. ஆனால், நாட்டின் பாதுகாப்புகுறித்து பொதுவாக விவாதிக்கப்பட்டதாக கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஜஸ்வந்த் சிங் கூறினார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பின் நடக்கும் 3வது பாதுகாப்புக்கமிட்டிக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+