ஜெ. மீதான நிலக்கரி ஊழல் வழக்கு: 27ம் தேதி தீர்ப்பு
சென்னை:
ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்ட நிலக்கரி ஊழல் வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று இரண்டாவதுதனி நீதிமன்ற நீதிபதி தார்வேஷ் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீது கடந்த ஆட்சியில் பல வழக்குகள் போடப்பட்டன. கொடைக்கானல் ஹோட்டல் வழக்கு மற்றும்டான்சி வழக்கில், அவருக்கு தனி நீதிமன்றம் தண்டனை வழங்கியதால் அவரால் கடந்த சட்டசபைத் தேர்தலில்போட்டியிட முடியவில்லை.
பின்னர் அவருடைய மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவ்விரு வழக்குகளிலும்ஜெயலலிதா நிரபராதி என்று தீர்ப்பு கூறி சமீபத்தில் விடுதலை செய்துவிட்டது.
இதனால் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதற்கிடையே வெளிநாட்டிலிருந்து தரம் குறைவான நிலக்கரியை அதிக விலைக்கு வாங்கியதில் தமிழக அரசுக்குஇழப்பு ஏற்பட்டதாக முன்னரே ஒரு வழக்கு தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து விட்டதையடுத்து, வழக்கின் மீதான தீர்ப்பு வரும் 27ம் தேதி காலை 10.30மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி தார்வேஷ் கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருந்தால்தான் அவரால் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும்முதல்வராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications