மேம்பால ஊழல்: கமிஷனுக்கு காலக் கெடு நீட்டிப்பு
சென்னை:
சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டுள்ள மேம்பால முறைகேட்டை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகம் கமிஷனின்வாக்குறுதி பத்திரங்களை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
சென்னையில் உள்ள பெரம்பூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, தமிழக அரசு நீதிபதிஆறுமுகம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது.
இந்த விசாரணை கமிஷனின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பெரம்பூரில் மேம்பாலம் கட்டும் பணி பாதியில் நின்று போயிருத்தல்,பணியை முடிப்பதில் ஏற்ப்பட்டுள்ள தாமதம், கட்டுமானத்திற்கான செலவு அதிகரித்துள்ளது மற்றும்கட்டுமானத்தின் ஒரு பகுதி மண்ணுக்குள் இறங்குதல் ஆகியவற்றின் விளைவாக முறைகேடுகள் நடந்துள்ளது.
இந்த முறைகேடுகள், விதி மீறல்கள் குறித்து தமிழக அரசால் நீதிபதி ஆறுமுகம் தலைமையில் விசாரணை கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை கமிஷன் சம்பந்தப்பட்ட வாக்குறுதிப் பத்திரங்களை சமர்ப்பிப்பதற்குகாலக்கெடுவை இம்மாதம் 22ம் தேதி முதல் மேலும் இரு வாரங்களுக்கு அரசு நீட்டித்துள்ளது.
வரும் ஜனவரி 4ம் தேதி மாலை 5.30 மணி வரை இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications