கிரிக்கெட்: மழையால் ஆட்டம் பாதிப்பு
பெங்களூர்:
பெங்களூரில் இன்று (வெள்ளிக்கிழமை) பெய்த மழையால் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலானமூன்றாவது நாள் ஆட்டம் துவக்கத்திலும் இறுதியிலும் மழையால் பாதிக்கப்பட்டது.
மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் துவங்கினாலும், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின்டெண்டுல்கர் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளைச் சிதறடித்தார்.
ஆனால் அவருக்குத் துணையாக நிற்க வேண்டிய ராகுல் டிராவிட், 61 பந்துகளில் வெறும் 3 ரன்களை மட்டுமேஎடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வந்த கேப்டன் சவுரவ் கங்குலியும் "முட்டை" ரன்களை எடுத்து பெவிலியன்திரும்பினார்.
நொந்து போயிருந்த டெண்டுல்கருக்கு வீரேந்திர சேவாக் தோள் கொடுத்தார். இதையடுத்து ஆட்டம் சூடுபிடித்தது.டெண்டுல்கரும் சதத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்.
ஆனால் அவர் 90 ரன்கள் (13 பவுண்டரிகள்) எடுத்திருந்தபோது, அவசரமாக இறங்கி ஆட முயற்சித்து ஸ்டெம்ப்அவுட் ஆகிவிட்டார்.
அடுத்து அனில் கும்ப்ளேயுடன் ஜோடி சேர்ந்து ஓரளவு நன்றாக ஆடி, அரை சதத்தைக் கடந்த சேவாக்கும் 66ரன்கள் (13 பவுண்டரிகள்) எடுத்த நிலையில், ஹோக்கர்டின் பந்தை விக்கெட் கீப்பர் போஸ்டரிடம் கேட்ச்கொடுத்துவிட்டு வெளியேறினார்.
பின்னர் தேநீர் இடைவேளையின்போது, மீண்டும் மழை வந்ததால் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.ஆட்டநேர இறுதியில் கும்ப்ளே 10 ரன்களும் ஹர்பஜன் சிங் ரன் எதுவும் எடுக்காமலும் ஆடிக் கொண்டிருந்தனர்.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 336/10 (123.3 ஓவர்கள்)
இந்தியா - 218/7 (86 ஓவர்கள்)