புவனகிரி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 2 டிரைவர்களும் பலி
Subscribe to Oneindia Tamil
புவனகிரி:
புவனகிரி அருகே 2 அரசுப் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 டிரைவர்களுமே உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.மற்றொரு அரசு டவுண் பஸ் சிதம்பரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.
புவனகிரி அருகே இந்த இரு பஸ்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இவ்விபத்தில் ஒரு பஸ்சின் டிரைவர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்றொரு பஸ்சின் டிரைவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
காயமடைந்த ஆறு பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து குறித்து புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications