திருச்சி அருகே கள்ள நோட்டு நடமாட்டம்: 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே கள்ள நோட்டுக்கள் வைத்திருந்ததாக 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சக்திவேல் (27) என்பவர் 100 ரூபாய் நோட்டைக்கொடுத்து சிகரெட் வாங்கினார்.
அந்த 100 ரூபாய் நோட்டை கள்ள நோட்டு என்று அடையாளம் கண்டுபிடித்த கடைக்காரர் உடனடியாக போன்செய்து போலீசாரை வரவழைத்தார்.
விரைந்து வந்த போலீசார், சக்திவேலைக் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அதே ஊரில் மேலும் ஒருவரையும் கரூர் மாவட்டத்தில் இரண்டுபேரையும் போலீசார் கைது செய்தனர்.
தற்போது 4 பேரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications