பாகிஸ்தானிடம் ஆதாரம் தர அமெரிக்கா கோரிக்கை: இந்தியா நிராகரிப்பு
வாஷிங்டன்:
நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகள் குறித்து ஆதாரங்கள் தந்தால் தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கைஎடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக எங்களிடம் பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.ஆனால், ஆதாரங்களைத் தருமாறு இந்தியாவிடம் கேட்கிறது.
எனவே, பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதாரங்களை தந்து உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
தர முடியாது- இந்தியா மறுப்பு:
பாகிஸ்தானிடம் எந்த ஆதாரத்தையும் தர முடியாது என இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ் கூறுகையில்,
தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை விளக்கும் ஆவணங்கள் தரப்பட்டுவிட்டன. மேலும்ஆதாரம் எல்லாம் பாகிஸ்தானிடம் தர முடியாது.
அதே நேரத்தில் இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆதாரங்களை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,பிரான்ஸ் ஆகிய நட்பு நாடுகளிடம் இந்தியா ஏற்கனவே தந்துவிட்டது.
இதை பாகிஸ்தானிடம் தர இந்தியா தயாராக இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications