இலங்கை பிரச்சனை: இந்தியா தலையிட புலிகள் எதிர்ப்பு?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியா முன் வரவேண்டும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளதை அந்தநாட்டில் பலர் விரும்பவில்லை என்று விடுதலைப் புலிகளின் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும், அமைதியை ஏற்படுத்தஇந்தியா உதவ வேண்டும் என்றும் இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்தியத் தலைவர்களை சந்திக்க இவ்வார இறுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டெல்லிசெல்கிறார்.

இந்நிலையில் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்ட அந்த அறிக்கை பற்றி லண்டனில்வெளியாகும் விடுதலைப் புலிகளின் பத்திரிக்கையான "தமிழ் கார்டியன்" என்ற பத்திரிக்கை விமர்சித்துஎழுதியுள்ளது.

இந்த பத்திரிக்கை எப்போதும் விடுதலைப் புலிகளின் கருத்தை எதிரொலிப்பதாகவே இருக்கும்.

இலங்கை அரசின் இந்த அறிக்கை இலங்கை தமிழர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. மேலும் இலங்கை அரசின்மீது சந்தேகப்படவும் தோன்றுகிறது என்று அப்பத்திரிக்கை கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே சமாதான பேச்சுவார்த்தையை நடத்தி வைக்க ஏற்கனவேநார்வே நாட்டு சமாதான குழு முன் வந்தது. இந்நிலையில் இந்தியாவின் தலையீட்டை இலங்கை அரசுஎதிர்பார்ப்பது நார்வேயின் சமாதானப் பேச்சுவார்த்தை தேவையில்லை என்பது போல் உள்ளது என்று அந்தபத்திரிக்கை கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+