For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழநி பிள்ளையார் சிலைகளுக்கு செருப்பு மாலை: 8 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

பழநி:

செருப்பு தொழிலாளியிடமிருந்து செருப்புக்களை திருடி பழநியில் உள்ள பிள்ளையார் சிலைகளுக்கு செருப்புமாலை அணிவித்த எட்டு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பழநியில் உள்ள கோயில்களில் நான்கு பிள்ளையார் சிலைகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை செருப்புமாலை போடப்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இது குறித்து போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் பழநியைச் சேர்ந்த பீர் முகமது, பஷார்அகமது, மீரான், தலித் சிவா, அய்யாவு, பாலமுருகன், சேதுபதி மற்றும் மணிமுத்து ஆகிய எட்டு பேரை போலீசார்கைது செய்தனர்.

போலீசாரிடம் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கூறியதாவது:

விடுதலை ஞாயிறுமலர் என்ற பத்திரிக்கையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சுற்றறிக்கை என்ற தலைப்பில்வெளியான பிரசுரத்தில், முஸ்லிம், தலித் இன மக்களுக்கு எதிராக சில கருத்துக்கள் இருந்தன.

இதனால் ஆர்.எஸ்.எஸ்சுக்கு எதிராக ஈடுபடுவது என்று திட்டமிட்டோம். அதன்படி பிள்ளையார் சிலைகளுக்குசெருப்பு மாலை போடுவது என்று முடிவு செய்தோம்.

பொன்னான் என்ற சாலையோர செருப்பு தொழிலாளி வைத்திருந்த செருப்புகளை திருடி, அவற்றை மாலையாகக்கோர்த்து, நான்கு குழுக்களாக பிரிந்து பிள்ளையார் சிலைகளுக்கு அவற்றை மாலைகளாகப் போட்டோம் என்றுஅவர்கள் கூறினர்.

இவ்வழக்கு தொடர்பான மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X