கழுத்தில் சுருக்குக் கயிற்றை மாட்டி பாமக நூதன போராட்டம்
சென்னை:
தமிழக அரசின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) பாமகதொண்டர்கள் கழுத்தில் சுருக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு வரும் 5 ஆண்டுகளில் 30 சதவிகிதம் அரசு ஊழியர்களை குறைப்பதாகவும், இனி புதிதாக வேலைக்குஎடுக்க மாட்டோம் என்று அறிவித்திருந்தது. இதற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இன்று பாமக தொண்டர்கள் இந்த அறிக்கையை கண்டித்து நூதனமான முறையில் கழுத்தில் சுருக்குமாட்டிக் கொண்டு தமிழக அரசை எதிர்த்து கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, எம்.பி. மூர்த்தி, இளங்கோவன்ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ராமதாஸ் கூறியதாவது:
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் தாழ்த்தப்பட்ட மற்றும் தலித் இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள்பாதிக்கப்படுவர்.
பஸ் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் ஆட்குறைப்பால் வாக்களித்த மக்களை அதிமுக அரசு வஞ்சித்துவருகிறது.
இந்த அறிக்கையால் பல இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ராமதாஸ் கூறினார்.