பாகிஸ்தானில் உள்ள தூதரை திரும்ப அழைத்தது இந்தியா
டெல்லி :
இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் விஜய் நம்பியாரை மத்திய அரசு திரும்பஅழைத்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்கியவுடன் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதர் அஸ்ரப் ஜஹாங்கீரை அழைத்து மத்திய அரசுமிகக் கடுமையாக கண்டித்தது. இந்தியாவின் கண்டனத்தை அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இன்று (வெள்ளிக்கிழமை) மாலைவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தியத் தூதரை திரும்ப அழைப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதாரங்களைக் கொடுத்த பிறகும் அந்நாடுஎந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதால் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த லக்ஷர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் போன்ற தீவிரவாத அமைப்புகள்தான்நாடாளுமன்றத்தைத் தாக்கியுள்ளனர் என்பது குறித்த ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டுவிட்டன.
இதற்கிடையே எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டதையடுத்து, இந்திய ராணுவமும்படைகளைக் குவிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்படுகிறது.
தனது தூதரை இந்தியா திரும்ப அழைத்துள்ளதால், பாகிஸ்தானும் தனது தூதரை திரும்ப அழைக்கும் எனத்தெரிகிறது.
இந் நிலையில் லக்ஷர்-ஏ-தொய்பாவை அமெரிக்கா தடை செய்தது தவறு என பாகிஸ்தான் அமைச்சர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications